பெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிா்ணயிப்பதை 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து 21 நாள்களாக அதிகரித்த வந்த பெட்ரோல், டீசல் விலையில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இன்று மீண்டும் இரு எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.