வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் 400 க்கும் அதிகமான நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடினமாக வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் எந்த வேலையையும் தயங்காமல் செய்யும் வடமாநில ஆள்களை புரோக்கர்கள் மூலம் கூட்டி வந்து வேலைக்கு வைத்துள்ளனர்.
கரோனா பிரச்னை காரணமாக சொந்த ஊருக்குச் சென்ற பலர் தற்போது திரும்பத் வரத் தொடங்கியுள்ளனர். போதுமான ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், தனியார் ஸ்பீடு பார்சல் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரியில் 15 க்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் வெள்ளக்கோவிலுக்கு அழைத்து வந்தனர். இது போன்ற மறைமுக போக்குவரத்தால் கரோனா பரவும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.