ராஜபாளையம் : ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி திருமதி நா. சண்முகம் அம்மாள் (80) புதன்கிழமை காலமானார்.
சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த சண்முகம் அம்மாள், ராஜபாளையத்தில் இன்று காலையில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ராஜபாளையத்தில் நடைபெறும்.
அவருக்கு தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பு செய்தி ஆசிரியர் நா. குருசாமி உள்பட இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு : 73587 03025