ஆஸ்திரிய நாட்டு இளவரசியும் இந்திய வம்சாவளி சமையல் வல்லுநரைத் திருமணம் செய்துகொண்டவருமான மரியா பெட்ரோவ்னா கலிட்ஸைன் மாரடைப்பால் இறந்தார்.
32 வயதேயான அவர், அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் மே நாலாம் தேதி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஆஸ்திரிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான கலிட்ஸைன், இந்திய வம்சாவளியினரா சமையல் வல்லுநர் ரிஷி சிங் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு ஹூஸ்டனில் வசித்துவந்தார்.
இறந்த கலிட்ஸைனுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கலிட்ஸைனுடைய மரணத்தை ஹூஸ்டன் கிரானிக்களில் வெளியான மரண அறிவித்தல் விளம்பரம் உறுதி செய்திருக்கிறது.