விழுப்புரத்தில் திரு.வி.க. வீதியிலுள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென தீவிபத்து நேரிட்டது.
தீப்பற்றியதில் அலுவலகத்தின் உள்ளே இருந்த கணினி மற்றும் இரண்டு மேஜைகள், அலுவலகத்தின் ஒரு பகுதி எரிந்து சேதமுற்றது.
மூடிய அலுவலகத்தில் தீப்பிடித்ததால் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கதவைத் திறந்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.