அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்

விஸ்கான்சின் மாகாணத்தில் வாவாடோசா நகரின் புறநகர்ப் பகுதியில் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமுற்றனர்.
காவல்துறை கட்டுப்பாட்டில் வணிக வளாகம்
காவல்துறை கட்டுப்பாட்டில் வணிக வளாகம்

விஸ்கான்சின் மாகாணத்தில் வாவாடோசா நகரின் புறநகர்ப் பகுதியில் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமுற்றனர்.

மில்வாக்கி வணிக வளாகத்துக்கு வந்திருந்த ஒருவர், ஒரு கடையின் முன் திடீரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் இவர்கள் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.

இதையும் படிக்கலாமே.. ஜோ பைடன் 78!

இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, வணிக வளாகத்தைக் காவல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

குற்றவாளியைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மறு அறிவிப்பு இன்றி வணிக வளாகம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com