அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமையில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நகர் 7வது வார்டு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
அருப்புக்கோட்டை 7வது வார்டு வாழவந்தபுரம் வீதி முனையில் நடைபெற்ற திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமிற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் நகர் மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சிக்கந்தர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.எஸ்.வி.டி. சுப்பாராஜ், நகரச் செயலாளர் ஏ.கே.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை உடன், நேரில் வழங்கி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலரும், புதிய உறுப்பினர்களாகச் சேர வந்திருந்த திரளான பொதுமக்களும் நேரில் கலந்து கொண்டனர்.