புதுச்சேரியில் ஏப்ரல் 30-ம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், சாராயக் கடைகள், கள்ளுக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தைப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
பொது முடக்கம் அமலில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளான மருந்தகம், பால், பெட்ரோல், மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.