தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என தமிழக ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், இரண்டு நாள்கள் ஊரடங்கு ஆகியவை குறித்து தமிழக ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ள ஆளுநர் கரோனா பரிசோதனைகள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின் போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.