வேதாரண்யம் உப்பு சத்யாகிரகம் 91-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: தியாகிகளுக்கு அஞ்சலி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு  சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 91-ஆவது ஆண்டு நினைவையொட்டி,
அகத்தியம்பள்ளி நினைவு தூண் வளாகத்தில் ஒரு கை பிடி உப்பு அள்ளி அஞ்சலி செலுத்திய மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.இராசேந்திரன் உள்ளிட்டோர்.
அகத்தியம்பள்ளி நினைவு தூண் வளாகத்தில் ஒரு கை பிடி உப்பு அள்ளி அஞ்சலி செலுத்திய மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.இராசேந்திரன் உள்ளிட்டோர்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு  சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 91-ஆவது ஆண்டு நினைவையொட்டி, அகத்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவு தூண் வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக விரிவான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட்டது.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930, ஏப்ரல் 30 -ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. 
சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினர். இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30 -ஆம் தேதி உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

நிகழாண்டுக்கான நிகழ்ச்சி ஊரடங்கு காரணமாக பாதை யாத்திரை உள்ளிட்ட விரிவான நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டது. அகத்தியம்பள்ளியில் உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்களவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினருமான பி.வி. ராசேந்திரன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com