சென்னை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தரப்பட்ட ரூ.2,756 கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கரோனா சிறப்பு கடன் உள்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை என்பது தவறான புரிதல்.
* உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கானது என்பதால் குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை.
* இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும்.
* மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதிமுக ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடியில் நிறைய குளறுபடிகள், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் அவை குறித்து உரிய விசாரணைகளுக்குப் பின் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு செயல்படுத்தப்படும்.