பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்: பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.
* மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீரமட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* 200 குளங்களின் தர உயர்த்த ரூ.11.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* ஆனைமலையாறு, நீராறு - நல்லாறு, பாண்டியாறு-புனம்புழா திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்.
* பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.
* அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும். இதற்காக உலக வங்கி உதவி பெறப்படும்.
* பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* காவிரி டெல்டாவில் பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் செயல்படுத்தப்படும்.
* நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்.
* கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம் அமைக்கப்படும்.
* 79,395 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.