சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த மக்களை தேடி வரும் மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மேலும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.741.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழக சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்காக ரூ.116.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு சித்தா பல்கலைகழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,046.09 கோடி நிதி ஒதுக்கீடு.
* 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1.303 ஆக அதிகரிக்கப்படும்.
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு.
* மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 13 மாதங்களாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.