தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதற்காக இண்டிரோ விமான நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ரூ.25000 அபராதம் விதித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக விமானப் பயணிகளுக்கு முகக்கவசம், மூன்றடுக்கு முகமூடி மற்றும் கிருமிநாசினிகளை இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இதையும் படிக்க | தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்நிலையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த சென்னை மாநாகராட்சியின் துணை சுகாதார ஆணையர் டாக்டர் மணீஷ் நர்னவரேவிற்கு வழங்கப்பட்ட கரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு தொகுப்புகளை பரிசோதனைக்குட்படுத்தினார்.
அதில் இண்டிகோ விமான நிறுவனம் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தவல்ல பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயணிகளுக்கு வழங்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.25000 அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இதையும் படிக்க | தில்லியில் புதிதாக 25 பேருக்கு கரோனா
அபராதத் தொகையை 7 நாள்களுக்குள் செலுத்தவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மறுசுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக்கைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.