ஆப்கனில் தலிபான்கள் குழந்தைகள் போல விளையாடிய கேளிக்கை பூங்காக்களின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அவற்றை தலிபான்கள் தீயிட்டு அழித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
இதையும் படிக்க | குழந்தைகளாக மாறிய தலிபான்கள்(விடியோ)
இந்நிலையில், காபூலில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் நுழைந்த தலிபான்கள் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கேளிக்கைப் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் விளையாடும் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவின.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைக்கும் அந்த ஏழு தலிபான்கள் யார்?
அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தலிபான்கள் விளையாடிய கேளிக்கைப் பூங்காக்களை அவர்களே தீயிட்டு எரித்து அழித்தனர். சமூக வலைத்தளத்தில் தலிபான்கள் பதிவிட்ட கேளிக்கைப் பூங்காக்களை தீயிட்டு அழிக்கும் காணொலிகள் பரவி வருகின்றன.