ஒடிசா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஒடிசாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்தியில்,
மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த கூட்டத்தொடரின் போது, 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.