மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 104.92 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,069 கன அடியிலிருந்து 1137கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியிலிருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 71.36 டி.எம்.சியாக இருந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 104.92அடியாக நீடிக்கிறது.