பொங்கல் தினத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளில், ஏராளமான மக்கள் புதுப்பானையில் மஞ்சள் குங்குமமிட்டு பச்சரிசி பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.
தனது சுட்டுரைப் பதிவில், “அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.