கேரள மாநில முதல்வர் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்  (கோப்புப்படம்)
கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

பொங்கல் பண்டிகையையொட்டி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.

பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சுட்டுரைப் பதிவில், “பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com