மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவினர் மீது திரிணமூல் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நாளை மறுதினம் (ஜூலை 2) மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய பாஜக தலைவரும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி மாநில அரசியல் நிலைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடப்பதாக எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் எழுப்புவது குறித்தும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுடன் சுவேந்து அதிகாரி சந்தித்து பேசினார்.