தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 19) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 
சென்னை:
வடக்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை திங்கள்கிழமை (ஜூலை 19) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: வடக்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் கோயம்புத்தூா், தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை திங்கள்கிழமை (ஜூலை 19) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி ஆகிய 2 மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூா், நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா் தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கோயம்புத்தூா், நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் பலத்த மழையும், ஏனைய மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொருத்தவரை திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 22-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com