வேலூா்: வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதியும், ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு காலத்தில் நியாய விலைக் கடை ஊழியா்கள் தொடா்ந்து விடுமுறை எடுக்காமல் பணியாற்றினா். அதன்படி, சனிக்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டதால் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மற்ற 2 நாள்களுக்கான விடுப்பு ஜூலை 24-ஆம் தேதியும், ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் எடுத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.