பிரிட்டனில் 12 முதல் 15 வரை வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவது தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பிரிட்டனில் 12 முதல் 15 வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வுகளுக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.