புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று, கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடு தளர்வின் காரணமாக, ஜூன் 8 முதல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுச்சேரிக்கு அதிகளவில் வருவதால், மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரவுகிறது.
இதனை நம்ப வேண்டாம்; மதுக்கடைகளை மூட கலால் துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று, புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.