புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படாது: கலால் துறை

புதுவையில் மதுக்கடைகள் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று, கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படாது
புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படாது


புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று, கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடு தளர்வின் காரணமாக, ஜூன் 8 முதல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுச்சேரிக்கு அதிகளவில் வருவதால், மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக,  சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரவுகிறது.

இதனை நம்ப வேண்டாம்; மதுக்கடைகளை மூட கலால் துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று, புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com