தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,757 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 23,24,597 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1094 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 378 பேர் பலியாகியுள்ளனர்.இதன்மூலம் கரோனாவால் பலியான்வர்களின் எண்ணிக்கை 28906 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 29243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 21,20,889 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.