மானாமதுரையில் கழைக்கூத்தாடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

சன்னதி புதுக்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் கழைக்கூத்தாடி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.
மானாமதுரை வட்டம் சன்னதி புதுக்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கழைக்கூத்தாடி மக்கள் தங்குவதற்காக அமைத்துள்ள குடிசைகள்
மானாமதுரை வட்டம் சன்னதி புதுக்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கழைக்கூத்தாடி மக்கள் தங்குவதற்காக அமைத்துள்ள குடிசைகள்


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் சன்னதி புதுக்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் கழைக்கூத்தாடி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.

மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மானாமதுரை வட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு நலத்திட்ட உதவி கேட்டு ஜமாபந்தியில் மனுக் கொடுத்து வருகின்றனர்.

மானாமதுரை ஒன்றியம் சன்னதி புதுக்குளம் கிராமத்தின் எல்லையில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து தங்கியுள்ள வீதிகளில் கழைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் கழைக்கூத்தாடி மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர்.

சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவனிடம்  இலவச வீட்டுமனை பட்டாக்கள் பெற்ற கழைக்கூத்தாடி மக்கள். 

இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்று வரும் ஜமாபந்தியின்போது 11 குடும்பங்களைச் சேர்ந்த கழைக்கூத்தாடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழைக்கூத்தாடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

 மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com