ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 3,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,89,513ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,706-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,498 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 18,38,469ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 38,338 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.