திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினர் மீண்டும் காப்பு காட்டில் விட்டனர்.
திருவள்ளூர் அருகே வயலூர் கிராமத்தைச் சேர்ந்தோர் புதன்கிழமை வயலுக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள 40 அடி விவசாய கிணற்றில் 2 வயதுடைய ஆண் மான் ஒன்று தண்ணீர் குடிக்க கிணற்றில் இறங்க முற்படும் போது தவறி விழுந்த மான் தத்தளித்து கொண்டிருந்தது.
திருவள்ளூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆண் புள்ளிமான்.
இதைப்பார்த்த விவசாயிகள் உடனே மப்பேடு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், விவசாயிகள் உதவியுடன் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை மீட்டனர். அதையடுத்து மீட்கப்பட்ட மானை வனத்துறையினர் பூண்டி காப்பு காட்டில் பாதுகாப்பாக கொண்டு விட்டனர். பின்னர் துள்ளிக்குதித்து காட்டிற்குள் ஓடியது புள்ளிமான்.