தமிழகத்தில் உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட9 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி. முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் அன்பரசன், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.