கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆளும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து இருந்து வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில் 11.30 மணி நிலவரப்படி, மநீம வேட்பாளர் கமல்ஹாசன் 7,074 வாக்குகள் பெற்று 500 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
கமல்ஹாசன் (மநீம) 7,074
மயூரா ஜெயகுமார் (காங்கிரஸ்) 6,540
வானதி சீனிவாசன் (பாஜக) - 4,597