திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபால் முன்னிலையில் உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி(தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுகிகளுக்கு உள்பட்ட 3,343 வாக்குச்சாவடிகளில் 16 லட்சத்து 44 ஆயிரத்து 85 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டியானது திருப்பூர் எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரியில் 5 அடுக்கு பாதுகாப்புடன் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சார்பில் 12 ஆயிரம் தபால் வாக்குகள் மாவட்டம் முழுவதும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணியானது ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில்
அவிநாசி தனி தொகுதி அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபால், திமுக கூட்டணியில் போட்டியிடும் அதியமானைவிட 2,023 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ப.தனபால்(அதிமுக)-4,362
அதியமான் (திமுக)-2,339