கரோனா: இந்தியாவில் ஒரேநாளில் 3,43,144 பேருக்கு தொற்று; 4000 பேர் பலி

நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா: இந்தியாவில் ஒரேநாளில் 3,43,144 பேருக்கு தொற்று; 4000 பேர் பலி

புதுதில்லி: நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனாவால் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 3,43,144 -ஆகவும், இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 37,04,893 பேராகவும் அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,000 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.40 கோடி (2,40,46,809) ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,00,79,599-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,44,776 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 13 -ஆம் தேதி வரை 31,13,24,100 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. வியாழக்கிழமை ஒரேநாளில் 18,75,515 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 17,92,98,584 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com