சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு கரோனாவுக்கு முந்தைய காலங்களை போலவே நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும் நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும்.
தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பட்டியலை வரும் ஜூன் 7 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்லுரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஜூன் 12-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.