தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 789 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 15 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (நவ.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 789 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,16,421-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 15 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,311-ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | நவ.19இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
கரோனாவிலிருந்து 913 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,70,761-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 9,349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,03,202 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.