நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நவம்பர் 24ஆம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு
மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள உள்ள இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.