திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளம் பகுதியில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முன்னீா்பள்ளத்தை அடுத்த வடுவூா்பட்டி டாஸ்மாக் கடை அருகே தலையில்லாத நிலையில் இளைஞா் சடலம் கிடப்பதாக முன்னீா்பள்ளம் போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்து.
சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போலீஸார்.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்ததில் கீழச்செவல் நயினாா்குளத்து தெரு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சங்கரசுப்பிரமணியன்(37) என்பது தெரியவந்தது.
இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். மோப்பநாய் சோதனைக்கு விடப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் மற்றும் போலீஸாா்.
இதனிடையே, இளைஞரின் தலையைத் தேடும் பணியை போலீஸாா் முடிக்கிவிட்டதுடன், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக நடைபெற்றதா எனவும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.