நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
மதுரை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தேர்தலில் ஒன்பதாவது வார்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் இன்பவல்லி, இவர் சொந்த வார்டில் போட்டியிட்டு ஒரு வாக்குகளை மட்டும் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.