கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தோட்டமூலா பகுதியில் கனமழையால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
கடந்த பதினைந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் இப்பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று தோட்டமூலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர் கனமழையால் ஊர் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பாலம் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.