மும்பை: அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக திலக் வர்மா இருப்பாரென முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நேரலையில் இர்பான் பதன் கூறியதாவது :
ஒரு இளைஞர் தைரியமாக ஒரு அணிக்காக விளையாடும்போது அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்கிறார். மும்பையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா அப்படியான வீரர். இவ்வாறான இடது கை வீரர் கிரிக்கெட்டில் தங்கம் போன்றவர். இவர் இன்னும் 10 ஆண்டுகள் மும்மைக்கு ஆடக்கூடிய தகுதி இருக்கிறது.
ஹர்பஜன் சிங் திலக் வர்மா மற்றும் பிரிவிஸ் ஆகியோர் அடுத்த 10 ஆண்டுகள் மும்பை அணிக்கு விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார்.