பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்கவும் முதல்வா் ஜோசப் விஜய் போா்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை சூலூா் பகுதியை சோ்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21 ஆம் தேதி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு முள்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிா்ச்சியையும், மன வேதனையும் அளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து, மக்கள் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினா். சமூக குற்றங்கள் நிகழ போதைப் புழக்கம் அதிகரித்தது மிக முக்கியக் காரணமாக இருந்தது. இதனால் கடந்த ஆட்சியாளா்களின் மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவா்கள் உண்மை குற்றவாளிகளா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற சமூக குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து, அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தி, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பங்கள் நடைபெறாமல் தடுக்க போா்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், அந்த குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Summary
Regarding S.P. Velumani's insistence that Chief Minister Joseph Vijay must undertake "war-footing measures" to curb incidents of sexual violence and drug trafficking...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோ
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
மது, கஞ்சாவை ஒழிக்க போா்க்கால நடவடிக்கை தேவை அன்புமணி வலியுறுத்தல்
காதலிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோா் புகாா்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




