கண்களைச் சுற்றி கருவளையம் வருவது இயல்பானது. மொபைல் போன், கணினி பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது.
ஆனால் கருவளையம் தற்காலிகமானதுதான். இதனை வீட்டிலுள்ள பொருள்களை பயன்படுத்தியே சரிசெய்ய முடியும்.
அந்தவகையில் கருவளையத்தைப் போக்குவதில் உருளைக்கிழங்கு முக்கியப் பொருளாக இருக்கிறது.
உருளைக்கிழங்கை தோல் சீவிய பின்னர் தேங்காய் போல துருவி கண்களை மூடி அதன் மீது மெல்லிய துணியை வைத்து அதில் துருவிய உருளைக்கிழங்கை வைக்க வேண்டும். ஒரு 10 நிமிடங்கள் இவ்வாறு வைத்திருக்கலாம்.
உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து அந்த பேஸ்ட்டை கண்களின் மேலும் கீழும் அப்ளை செய்யலாம். இல்லையெனில் அந்த சாறை மட்டும் பிழிந்து இரவில் தூங்கும்முன் கண்களின் மேலும் கீழும் தடவிவிட்டு படுக்கலாம்.
உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்கலாம்.
அதிகமாக கருவளையம் உள்ளவர்களுக்கும் ஒரு வாரத்தில் மாற்றம் தெரியும்.