தேவையானவை:
மரவள்ளிக் கிழங்கு துருவல் - 3 கிண்ணம்
தோசை மாவு - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 8
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண் ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: தேங்காய்த் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை "சிம்'மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
- கா.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.