வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இதையெல்லாம் செய்யாதீங்க!

சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்த்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும்
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இதையெல்லாம் செய்யாதீங்க!
  • சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்த்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும்.
  • சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும். அப்போது குடிக்க வேண்டும்.
  • சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. காரணம், குடல் தனது வகையில் செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.
  • குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
  • சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
  • சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
  • சாப்பிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கெனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.
  • குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
  • சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்குவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.

- பொ.பாலாஜிகணேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com