• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு லைஃப்ஸ்டைல் செய்திகள்

என் நண்பனைக் கொன்ற உனக்கு, இதுதான் தண்டனை! போலந்து நாடோடிக் கதை

By  - குடந்தை பாலு  |   Published on : 11th September 2018 03:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

8409212e3ae9ee54a47c20f7a6462f21

 

ஒரு மாந்தோப்பில் சிட்டுக்குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது பக்கத்து ஊருக்குப் பறந்து சென்றது.

அங்கு ஒரு சாலை ஓரத்தில் இறைச்சிக் கடை ஒன்று இருப்பதை அது கண்டது. அங்கு குட்டிநாய் ஒன்று பசியோடு அந்த இறைச்சித் துண்டுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் குருவி கவனித்தது.

கடைக்காரன் அயர்ந்த நேர்த்தில் ஓர் இறைச்சித் துண்டைக் கொத்தியது. அதைக் குட்டிநாயின் அருகே போட்டது. ஆசையுடன் இறைச்சித் துண்டைக் கவ்விய நாய்க்குட்டி ஒரு மரத்தின் பின்னால் அமர்ந்து உண்டது. குருவியைப் பார்த்து 'நன்றி' என்றது.

நாளடைவில் இரண்டும் நண்பர்களாகின. தினமும் குருவியும் நாய்க்குட்டியும் சந்தித்து மகிழ்ச்சியாக விளையாடின. ஒருநாள் குடிகாரன் ஒருவன், குதிரை வண்டி ஓட்டிக் கொண்டு அந்த வழியில் வந்தான். வேண்டுமென்றே சாலை ஓரத்தில் அவன் வந்தான்.

'ஓரமாக வராதே' எனக் குருவி எச்சரித்தது. இருந்தாலும் அவன் கேட்வில்லை. சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி மீது வண்டி ஏறியது, சிறிது நேரத்தில் நாய்க்குட்டி இறந்தது.

இதைக் கண்டு வருந்திய குருவி, வண்டிக்காரன் மீது, கோபம் கொண்டது. இனிமேல் உனக்குக் கேடு காலம்தான் எனக் கத்தியது. அவன் வந்த வண்டியில் இரண்டு பீப்பாய்களில் தேன் இருப்பதைக் கண்டது.

ஒரு பீப்பாயின் மூடியைப் பலங்கொண்ட மட்டும் கொத்திக் கொத்தி இழுத்தது. அதனால் பீப்பாயில் இருந்த தேன் தெருவில் கொட்டி பிறகு காலியானது.

மீண்டும் குருவி பறந்து சென்று மற்றொரு பீப்பாயின் மூடியைக் கொத்தி இழுத்தது. அதிலிருந்த தேனும் சாலையில் கொட்டியது.

பிறகு வண்டியின் முன்னால் சென்ற குருவி, முதல் குதிரையின் கண்களைக் கொத்தியது. வேதனையால் குதிரை துள்ளியது; கனைத்துக் கொண்டே திமிறியது.

வண்டிக்காரன் மிகுந்த கோபத்துடன், சவுக்கை எடுத்து குருவியின் மீது வீசினான். குருவி சட்டென்று பறந்து விட்டது. அதனால், சவுக்கின் நுனி குதிரையின் நெற்றியில் பட்டு வலி உண்டாக்கியது. வலி பொறுக்காத குதிரை அந்த இடத்திலேயே விழுந்து இறந்து விட்டது.

குருவி பறந்து வந்து இரண்டாவது குதிரையின் கண்களைக் கொத்தத் தொடங்கியது. மீண்டும் வண்டிக்காரன் சவுக்கை எடுத்தான். முன்பு போலவே சவுக்கடி குதிரையின் மீது பட்டு, அந்தக் குதிரையும் இறந்தது.

வண்டிக்காரன் தன் மனைவியிடம் நடந்த நிகழ்ச்சிகளை மிகவும் வருத்தத்துடன் கூறினான். 'என் கையில் குருவி அகப்படட்டும்... அதன் கழுத்தை இறுக்கிக் கொன்று விடுகிறேன்' என்றான்.

அந்த நேரம் குருவி, ஜன்னலின் மீது வந்து அமர்ந்தது. 'இதுதான் நமக்கு கஷ்டத்தைத் தந்த குருவி' என்று கத்தினான். உடனே அவன் மனைவி, கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து குருவி மீது வீசினாள்.

குருவி தப்பித்தது. ஆனால் ஜன்னலில் இருந்த திரைச்சீலையில் தீப்பிடித்தது. அது 'சரசர'வெனப் பரவி வீட்டையே எரிக்கும் அளவுக்கு வந்தது. என் நண்பனைக் கொன்ற உனக்கு, இந்த தண்டனை போதுமென்று நினைக்கிறேன்; இனிமேல் தீங்கு செய்யும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடு' என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து பறந்து சென்றது குருவி.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
TAGS
poland short story kuruvi நாடோடி கதை போலந்து குருவி கதை

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்