"எங்கம்மா எது செய்தாலும் எங்க அப்பா வாயை மூடிக்கிட்டு சாப்பிட்டுப் போயிடுவார்ன்னு சொன்னா... ஏன் ஆச்சரியமா பாக்குற?''
"வாயை மூடிக்கிட்டு எப்படிச் சாப்பிட முடியும்ன்னுதான்''
தீ.அசோகன், சென்னை-19.
''மழைக்காலம் வந்தா கையிலே
ஏன் தாயத்துக் கட்டிக்கிறே?''
"பெய்றது பேய்' மழையாச்சே''
க. நாகமுத்து, திண்டுக்கல்.
**
"நீங்க எழுதின புத்தகத்திலே "கொசுவுக்கு நன்றி'ன்னு முதல் பக்கத்திலே போட்டிருக்கீங்களே... ஏன்?''
"கொசுக்கடியினால் தூக்கம் வராம விழிச்சிருந்தப்ப எழுதின புத்தகமாச்சே''
பி.பரத், கோவிலாம்பூண்டி