'அம்மா,... டாக்டர் உன்னை "கம்பு' சாப்பிடச் சொன்னாரே!....''
ஆமாம்,.... அதுக்கென்ன?...'
'அப்புறம் பாட்டி எப்படி நடப்பாங்க?''
- என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.
'பாக்கு மரத்துக்கும், தென்னை மரத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு!....என்னன்னு சொல்லு பார்க்கலாம்?...'
'நீயே சொல்லு!...'
'இரண்டிலேயும் மாங்காய் காய்க்காது!....'
- டி.மோகன்தாஸ், நாகர்கோவில்.
'படிக்கிற வயசுவே ஆறு மணிநேரம் தூங்கினாப் போதும்!....'
'வீட்டிலேயா?.... பள்ளிக்கூடத்திலேயா சார்?...'
- பொருநை பாலு, திருநெல்வேலி.
'அந்த வாஸ்து ஜோதிடர் போலின்னு எப்படி சொல்றே?'
'பின்னே என்ன?,....மனக்கோட்டை கட்ட இங்கு "வாஸ்து' பார்க்கப்படும்னு
போர்டு வெச்சிருக்காறே!...'
- இளன், 2/151, மெளலிவாக்கம்
'கேள்வி கேட்டா ஏன் விடை சொல்லாம நிக்கறே?...'
'நான் சொல்லி உங்களுக்குத் தெரியணுமா சார்!''
- என்.பர்வதவர்த்தினி, சென்னை - 600075.
'பாயசத்துலே பந்து விழுந்துடிச்சி!...'
'இப்போ இது பால் பாயசம்!...'
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை