கொஞ்சம் வசம்பை ரவா, மைதா உள்ள டப்பாவில் தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.
இஞ்சியின் தோலைச் சீவி விட்டு, அலசி சுத்தம் செய்துவிட்டு தயிரில் போட்டால் தயிர் நீண்ட நேரம் புளிக்கவே புளிக்காது.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
பச்சை மிளகாயை காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.
தோசை சுடும் போது தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
தேங்காயை உடைத்தவுடன் கழுவிவிட்டு பின் பிரிட்ஜில் வைத்தால் அதில் பிசுபிசுப்பு ஏற்படாது.
சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.
ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
அடைக்கு ஊற வைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊற வைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.