'காற்று மாசுபாடு குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்'

அதிகம் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
'காற்று மாசுபாடு குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்'

அதிகம் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்கிசோஃபெரினியா (Schizophrenia) என்பது நாள்பட்ட, மோசமான மனச்சிதைவு நோய் ஆகும். அதன்படி, ககாற்று மாசுபாட்டின் அளவு உயர்ந்தால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஸ்கிசோஃப்ரினியா ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கன மீட்டருக்கு காற்று மாசுபாட்டின் செறிவு 10 µg/m3 சராசரியாக அதிகரிக்க, ஸ்கிசோஃப்ரினியாவின் ஆபத்து சுமார் 20 ஆக அதிகரிக்கிறது என டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹென்றிட் திஸ்டட் ஹார்ஸ்டல் கூறினார்.

காற்று மாசுபாட்டின் செறிவு நாள் ஒன்றுக்கு சராசரியாக 10µg /m3-க்கும் குறைவாக வெளிப்படும் பட்சத்தில் பெரிதாக ஆபத்து ஒன்றும் இல்லை. நாள் ஒன்றுக்கு 25 µg/m3க்கு மேல் வெளிப்படும் குழந்தைகளுக்கு ஸ்கிசோஃப்ரினியா உருவாகும் ஆபத்து 60 சதவீதம் அதிகம் என்றும் ஹார்ஸ்டல் கூறினார்.

ஜமா நெட்வொர்க் ஓப்பன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆய்வுக் குழுவில் மொத்தம் 23,355 பேர் பங்கேற்றனர். இவர்களில் 3,531 பேருக்கு ஸ்கிசோஃப்ரினியா பாதிப்பு ஏற்பட்டது. காற்று மாசுபாட்டிற்கும் ஸ்கிசோஃப்ரினியாவிற்கும் இடையிலான தொடர்பை இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர் விளக்கியுள்ளார். 

குழந்தைப் பருவத்தில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், ஸ்கிசோஃப்ரினியா பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் மேலும் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com