'இசையால் மன அமைதி மட்டுமல்ல...13 வகையான உணர்ச்சிகள் வெளிப்படும்'

இசை மனிதர்களிடையே 13 விதமான உணர்வுகளைத் தூண்டுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.
'இசையால் மன அமைதி மட்டுமல்ல...13 வகையான உணர்ச்சிகள் வெளிப்படும்'

இசை மனிதர்களிடையே 13 விதமான உணர்வுகளைத் தூண்டுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.

உலகளவில் மிகவும் பொதுவான மொழியாக விளங்கும் இசை, மனிதனில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், இசை ஒவ்வொரு மனிதனிடமும் 13 வித்தியாசமான உணர்வுகளைத் தூண்டுகிறது என தெரிய வந்துள்ளது. கேளிக்கை, மகிழ்ச்சி, சிற்றின்பம், அழகுணர்வு, மன அமைதி, சோகம், கனவு, வெற்றி, பதட்டம், பற்றாக்குறை, எரிச்சல், எல்லை மீறுதல் உள்ளிட்ட வெவ்வேறு வித உணர்ச்சிகள் இசையின் வாயிலாக வெளிப்படுகின்றன.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வுக்காக, ராக், நாட்டுப்புறப் பாடல்கள், ஜாஸ், கிளாசிக்கல், உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவிலும், சீனாவிலும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பாடல்களை கேட்கும்போது, அவர்களிடம் இருந்து வரும் உணர்ச்சிப்பூர்வமான பதில்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். வெவ்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்கள்கூட இசை மூலமாக ஒத்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களிடையே நேர்மறை, எதிர்மறை என்ற இரண்டு விதங்களாக உணர்வுகள் வேறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com