திகில் படங்கள் பார்ப்பது உற்சாகத்தை அதிகரிக்குமா? ஆய்வு

திகில் படங்கள் பார்ப்பது உற்சாகத்தை அதிகரித்து மூளையின் செயல்பாட்டைக் கையாளுகின்றன என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது
திகில் படங்கள் பார்ப்பது உற்சாகத்தை அதிகரிக்குமா? ஆய்வு

திகில் படங்கள் பார்ப்பது உற்சாகத்தை அதிகரித்து மூளையின் செயல்பாட்டைக் பாதிக்கின்றன என்பதை ஆய்வு வெளிப்படுத்தியது.

திகில் திரைப்படங்களைப் பார்க்கும் போது, அவை மூளையின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி நடந்தது. அச்சத்தில் நரம்பியல் செயல்பாட்டின் மாற்றங்கள் வரைபடமாக்கப்பட்டது.

பின்லாந்தின் துர்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் நாம் ஏன் ஈர்க்கப்படுகிறோம் என்று ஆய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் கடந்த நூற்றாண்டின் 100 சிறந்த / பயங்கரமான திகில் திரைப்படங்களை தேடிப் பிடித்தனர். அவை எவ்வாறு மக்களை உணர வைத்தன என்பது குறித்து விரிவான ஆய்வு நிகழ்த்தினர். இந்த ஆய்வு நியூரோல்மேஜ் இதழில் வெளியிடப்பட்டது.

முதலாவதாக, ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 72 சதவிகித மக்கள் கடைசியாக ஒரு திகில் படம் பார்த்ததாக தெரிவித்தனர். அவ்வாறு செய்வதற்கான காரணங்கள், பயம் மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளைத் தவிர, அத்தகைய படங்களைப் பார்க்கும்போது உற்சாகமாக இருந்தது என்று கூறினர். திகில் திரைப்படங்களைப் பார்ப்பதும் சமூகமயமாவதிலிருந்து  தவிர்க்கவும், பலரும் திகில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்.

இயற்கையில் உளவியல்ரீதியான மற்றும் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட திகிலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஜத்தில் பார்க்கக் கூடியதைக் காட்டிலும் திரையில் காட்சிப்படுத்தப்படும் விஷயங்களால் பயம் கொண்டனர்.

இதற்குக் காரணம் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுதான். முக்கியமாக மக்கள் அனுபவிக்கும் இரண்டு வகையான பயத்தை அவை பிரதிபலிக்கிறது. ஏதோ சரியாக இல்லை என்று ஒருவர் உணரும்போது ஏற்படும் ஒருவிதமான உணர்வு, ஒரு பேய் அல்லது பிசாசின் திடீர் தோற்றத்திற்கு நம்மிடம் ஏற்படும் அச்ச உணர்வு இவை நம்உணர்வுநிலையை கொதிக்க வைக்கிறது என்று துர்கு பி.இ.டி மையத்தைச் சேர்ந்த முதன்மை புலனாய்வாளர் பேராசிரியர் லாரி நும்ன்மா கூறுகிறார் .

பல்வேறு வகையான பயங்களுக்கு மூளை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை எம்.ஆர்.ஐ சோதனை வெளிப்படுத்தியது. இந்தச் சிக்கலான மற்றும் எப்போதும் மாறிவரும் சூழலுக்கு பதிலளிக்கும் விதமாக மூளை எவ்வாறு பயத்துடன் சமாளிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிய விரும்பினர். காந்த அதிர்வு இமேஜிங் ஸ்கேனரில் நரம்பியல் செயல்பாட்டை அளவிடும் அதே வேளையில், இந்தக் குழு மக்களை ஒரு திகில் திரைப்படத்தைப் பார்க்கச் செய்தது. 

பதற்றம் மெதுவாக அதிகரித்து வரும் அந்தச் சமயங்களில், காட்சி மற்றும் செவிவழிப் பார்வையில் ஈடுபடும் மூளையின் பகுதிகள் மிகவும் சுறுசுறுப்பாகின்றன, ஏனெனில் சூழலில் அச்சுறுத்தல் குறித்த குறிப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் மிகவும் முக்கியமானது. திடீர் அதிர்ச்சிக்குப் பிறகு, உணர்ச்சி செயலாக்கம், அச்சுறுத்தல் மதிப்பீடு மற்றும் முடிவெடுப்பதில் ஈடுபட்டுள்ள பகுதிகளில் மூளையின் செயல்பாடு மிகவும் தெளிவாகத் தெரிகிறது, விரைவான பதிலை செயல்படுத்துகிறது. அவ்வகையில் திகில் திரைப்படங்கள் நம் உற்சாகத்தை அதிகரிக்கத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர் மத்தேயு ஹட்சன் விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com